கர்நாடகத்தில் சண்டை போடும் அதிமுக- தமிழக காங்கிரஸ்
பெங்களூர்:
தமிழகத்தில் சண்டை போட்டு வரும் காங்கிரஸ்- அதிமுக தங்கள் மோதலை கர்நாடகத்துக்கும்விரிவுபடுத்தியுள்ளன.
கர்நாடகத்தில் பெங்களூரின் ஊரகப் பகுதியில் உள்ள கனகபுரா எம்.பி. தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கிறது.இதில் முன்னாள் பிரதமர் தேவ கெளடா ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ்சார்பில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியின் கீழ் வரும் பெங்களூரின் ஒரு பகுதி வாக்காளர்களும் இத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.இந்தப் பகுதியில் பெருமளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களின் வாக்குகளைக் கவர தமிழக கட்சிகளின்ஆதரவை கெளடாவும், சிவக்குமாரும் நாடியுள்ளனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவதால் தமிழக காங்கிரஸ் சிவக்குமாருக்கு முழு ஆதரவுதெரிவித்துள்ளது. இது தவிர அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்தலைமையில் சில எம்.எல்.ஏக்களும் பெங்களூர் வந்துள்ளனர்.
அவர்கள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்தனர். பின்னர் சிவ்ககுமாருக்கு ஆதரவாக கனகபுராதொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து தேவ கெளாடாவின் ஆட்கள் அதிமுகவின் ஆதரவை வளைத்துப் போட்டுள்ளனர். கர்நாடக புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவைத் தலைவர் புகழேந்தி தலைமையிலான அதிமுகவினர் இன்று கெளடாவுக்கு ஆதரவுதருவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் முன் வந்துள்ளனர்.
இளங்கோவன் பிரச்சாரம் செய்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகழேந்தி தலைமையிலான அதிமுகவினர்கெளடாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய புகழேந்தி, கெளடாவுக்கு ஆதரவு தர எங்கள் தலைவி உத்தரவிட்டுள்ளார்.அவர் தான் விவசாயிகளுக்காக பாடுபட்டவர். கிருஷ்ணாவின் அரசு கம்யூட்டர் தொழில்நுட்பம், ஐ.டி. தவிர வேறுஎந்தத் தொழிலையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது என்றார்.