அழகிரியுடன் ஸ்டாலினை ஒப்பிடுவதா? - கருணாநிதி கண்டனம்
சென்னை:
ஸ்டாலினுடன், அழகியை ஒப்பிடுவது தவறானது என்று அவர்களுடைய தந்தையும் திமுக தலைவருமானகருணாநதி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியை, சென்னை மாநகரமேயரும், அழகிரியின் தம்பியுமான மு.க. ஸ்டாலினுடன் ஒப்புமைப்படுத்தி ஒரு பத்திரிக்கையில் செய்திவெளியாகியிருந்தது.
இதற்கு கருணாநிதி கண்டனம் தெவித்துள்ளார். இதுதொடர்பாக முரசொலி பத்திரிக்கையில் அவர்உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அழகிரியும், ஸ்டாலினும் ஆண்டிப்பட்டியில் போட்டியிடவில்லை. அப்படி இருக்கையில் அவர்களைஒப்புமைப்படுத்தி செய்தி வெளியிடுவது தேவையில்லாத விஷயம்.
இப்படி எழுதியிருப்பது அந்தப் பத்திக்கையாளர்களுடைய மோசமான உணர்வையே காட்டுகிறது. ஒற்றுமையாகஇருக்கும் அந்த சகோதரர்களுக்குள் பிளவை ஏற்படுத்தவே இப்படி எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரை எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், திமுகவுக்கும் இழைக்கப்பட்ட அவமயாதையாக நான்கருதுகிறேன்.
ஆண்டிப்பட்டியில் வைகை சேகர் வெற்றி ஒன்றுதான் இப்போதைக்கு எனது முக்கிய லட்சியமாக இருக்கிறது. கட்சிநலன்தான் எனக்கு முக்கியம். இதையே உடன்பிறப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற கட்டுரைகளைக் கண்டு கொள்ளாமல் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை மட்டும் மனதில் வைத்துஉடன்பிறப்புகள் செயல்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார் கருணாநிதி.