கோவை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்: 2 பேர் சீரியஸ்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரி கடந்த திங்கள்கிழமை முதல்உண்ணாவிரதம் இருந்த 30 கைதிகளில் 2 பேர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 167 பேர் கைதுசெய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வரும் இக்கைதிகளில் 30 பேர் கடந்த திங்கள்கிழமை தங்களுக்குத்தரப்பட்ட உணவைப் பெற்றுக் கொள்ள மறுத்து, உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தனர்.

தங்களுக்கும் இந்தக் குண்டு வெடிப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று கூறிய இந்த 30 கைதிகள், எனவேவழக்கை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது தங்களை வழக்கு முடியும் வரை ஜாமீனில் விட வேண்டும் என்றும்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்த 2 கைதிகள் நேற்று இரவு மயங்கிச் சாய்ந்தனர். அவர்கள் உடனடியாககோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு சென்ற பிறகும் அந்த 2 கைதிகளும் தங்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று கூறி பிடிவாதம்பிடித்தனர்.

இதற்கிடையே மற்ற 28 கைதிகளும் தங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்வதாகப் போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+