ஆண்டிப்பட்டி தேர்தலில் மக்கள் தைரியமாக வாக்களிக்கலாம்: டி.ஜி.பி.
மதுரை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் வாக்குப்பதிவின் போது கலவரம் நடப்பதாகத் தனக்கு தகவல் எதுவும் வரவில்லைஎன்றும் போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அத்தொகுதி மக்கள் தைரியமாக வாக்களிக்கலாம் என்றுதமிழக டி.ஜி.பி. நெய்வால் கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் பாதுகாப்பு குறித்து பார்வையிட வந்த நெய்வால் மதுரையில் நிருபர்களுக்குபேட்டியளிக்கும் போது கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் வாக்குப் பதிவின் போது கலவரம் நடப்பதாக எனக்கு தகவல் எதுவும் வரவில்லை. அங்குசட்டம், ஒழுங்கு எதுவும் பாதிக்காத வகையில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடப்பதற்காக 3,000 போலீசாரும், 13 கம்பெனி மத்திய ரிசர்வ்போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 ரிசர்வ் போலீசாரும், 4 தமிழக போலீசாரும் இருப்பார்கள்.
மேலும் வன்முறையைத் தூண்டிவிடுவதற்காக வெளியூர்களிலிருந்து சமூக விரோதிகள் நுழைந்துவிடக் கூடாதுஎன்பதற்காக ஆண்டிப்பட்டி தொகுதியைச் சுற்றிலும் 10 இடங்களில் "செக் போஸ்ட்" அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்புக்காக 3 புலனாய்வுக் குழுவினரும் அமைக்கப்பட்டுள்ளனர். இது தவிர 17 அதிரடிப்படைக்குழுவினர் ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் ரோந்து சுற்றி வருவார்கள்.
இதனால் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் பயமின்றி தைரியமாக வாக்களிக்கலாம்.
கலவரம் எதுவும் ஏற்படாதவாறு தடுப்பதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள விடுதிகள், மற்றும் தேனிமாவட்டத்திற்கு வரும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது என்று நெய்வால் கூறினார்.
-
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர் -
Election: ஓட்டு போட உங்க நிறுவனத்தில் லீவ் தரலயா? உடனே புகார் அளிக்கலாம்.. எப்படி? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!












Click it and Unblock the Notifications