லத்தி வேண்டாம், கயிறு போதும்

Subscribe to Oneindia Tamil

தேனி:

தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜெயலலிதா வரும்போது பொதுமக்களிடம் லத்தியை சுழற்றாமல், நைலான் கயிற்றின்மூலம் கூட்டத்தைச் சுற்றி வளைத்து கட்டுப்படுத்துங்கள் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், இல்லாத போதும் அவர் செல்லும் இடங்களில், அவரை பார்க்கநெருங்கும் கூட்டத்தை போலீசார் லத்தியால் அடித்து விரட்டுவது வழக்கம்.

இது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுகவினர் கருதுகின்றனர். இதனால் தேர்தல் வெற்றிபாதிப்படைக்கூடாது என்று நினைத்த அதிமுகவினர் போலீசாருக்கு புதிய உத்தரவுகளை போட்டுள்ளனனர்.

ஜெயலலிதாவைப் பார்க்க வருபவர்களை லத்தியால் கட்டுப்படுத்தக் கூடாது, அதற்குப் பதில் நைலான் கயிற்றைக்கொண்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தங்க இடம் தேடும் போலீசார்

வாக்குப்பதிவின் போது அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக 13 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீசார்ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு கம்பெனிக்கும் 100 போலீசார் வீதம் 1,300 போலீசார் ஆண்டிப்பட்டிக்கு வரஉள்ளனர்.

இவர்களை தங்க வைப்பதற்கு ஆண்டிப்பட்டியில் உள்ள திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளன.இவையும் போதாது என்றால் தேனி, வீரபாண்டி, பெரியகுளம் போன்ற இடங்களிலும் திருமண மண்டபங்களைவாடகைக்கு எடுக்கப்பட உள்ளன.

இந்த பணிகளில் உள்ளூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+