பஞ்சாப் தேர்தல்: 50 சதவீத வாக்குப்பதிவு
சண்டிகர்:
பஞ்சாபில் இன்று (புதன்கிழமை) நடந்த சட்டசபைத் தேர்தலில் 50 முதல் 60 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின.
பஞ்சாப் மாநிலத்தில் 116 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலுக்காக 18,239 வாக்குச் சாவடிள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3,628 வாக்குச் சாவடிகள் பதற்றம்நிறைந்ததாக கணக்கிடப்பட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த தேர்தலுக்காக 60,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் துணைராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மத்திய ரிசர்வ் போலீசின் 30 கம்பெனிகளும் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டனர்.
1.5 லட்சம் பணியாளர்கள் தேர்தலுக்காக அமர்த்தப்பட்டனர். 116 தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிக்கும்பணியில் ஈடுபட்டனர்.
முதல்முறையாக இம்மாநிலத்தில் மின் வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அமைதியாக முடிந்தஇன்றைய தேர்தலில் 50 முதல் 60 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 3 பேர் தேர்தல் கலவரத்தில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் சிரோமணி அகாலிதளமும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்தியகம்யூனிஸ்டும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தான்வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
சிரோமணி அகாலி தளத்தின் தலைவரும், பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ்சிங பாதல் இன்று காலைவாக்களித்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், கருத்துக்கணிப்புகள் தவறானவை. எங்கள்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications