கண்ணகி, திருவள்ளுவருக்காக குமரியிலிருந்து சென்னைக்கு பேரணி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் வைக்கக் கோரியும்,கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை ஒழுங்காக பராமரிக்கக் கோரியும் கன்னியாகுமரியில் இருந்துசென்னைக்கு ஒரு பேரணி புறப்பட்டுள்ளது.

வ.மு. சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்தப்வாகனப் பேரணியை நடத்துகின்றன.

இந்தப் பேரணி மதுரை, தஞ்சை, திருச்சி ஆகிய நகர்கள் வழியாக சென்னை வந்தடையும்.

பேரணியில் பல்வேறு வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் வழியில் எல்லாம் கண்ணகி சிலை அகற்றம்குறித்தும், திருவள்ளுவர் சிலையை அரசு சரியாக பராமரிக்காமல் புறக்கணித்து வருவது குறித்தும் மக்களிடையேதமிழறிஞர்கள் பேசுகின்றனர்.

குமரி முனையில் 133 அடி திருவள்ளுவர் சிலையை கருணாநிதி முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார்எனபது குறிப்பிடத்தக்கது. அதனால் தானோ என்னவோ அந்த சிலை முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+