விருந்தினர் இல்லத்தில் தங்க அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க கருணாநிதி மறுப்பு
சென்னை:
திண்டுக்கல் அருகே குடகனாறு விருந்தினர் இல்லத்தில் தங்குவதற்கு மீண்டும் விண்ணப்பத்தால் அதைப் பரிசீலிக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பரிசீலிக்க வேண்டும் என்று சொல்வது எங்கள் கோரிக்கையை ஏற்பதாகாது என்று கூறிய கருணாநிதிமீண்டும் விண்ணப்பிக்க மறுத்துவிட்டார்.
ஆண்டிப்பட்டி பிரச்சாரத்திற்கு வருகை தரும் கருணாநிதி தங்குவதற்காக பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானகுடகனாறு விருந்தினர் இல்லத்தில் 4 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஆனால் தமிழக அரசு அதை ரத்து செய்துவிட்டதாகக் கூறி, திண்டுக்கல் நகர திமுக செயலாளர் பஷீர் அகமதுசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரித்த நீதிபதி சதாசிவம், இதே குடகனாறு விருந்தினர் இல்லத்தில்கருணாநிதி தங்குவதற்காக மீண்டும் விண்ணப்பித்தால், அதைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று திண்டுக்கல்மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் அந்த விருந்தினர் இல்லத்தில் தங்குவதற்காக மீண்டும் விண்ணப்பிக்க மாட்டேன் என்று இன்றுகருணாநிதி நிருபர்களிடம் கூறினார்.
எங்கள் கோரிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சரியான விடை அல்ல என்றும் கருணாநிதிகூறினார்.












Click it and Unblock the Notifications