கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரூ.2,500 கோடி ரஷ்யா ஒதுக்கீடு
மாஸ்கோ:
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கான கருவிகள் வழங்குவது தொடர்பாக, ரூ.2,500 கோடிக்கான ஒப்பந்தத்தில்இந்தியாவும், ரஷ்யாவும் கையெழுத்திட்டன.
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையமும், ரஷ்யாவில் உள்ள அட்மாஸ்டிராய் கார்ப்பரேஷனும்கருவிகள் வழங்குவது தொடர்பாக ரூ.2,500 கோடிக்கு செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டன.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் சேர்மேன் வி.கே. சதுர்வேதி மாஸ்கோவில் இந்த ஒப்பந்தத்தில்கையெழுததிட்டார். பிறகு அவர் இந்திய நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ரஷ்யாவுடனான ஒப்பந்தம் மிக பெரிய ஒப்பந்தம் ஆகும். 2 நவீன ரியாக்டர்களும், நீராவி டர்பைன் மற்றும்ஜெனரேட்டர் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் இது. இதுபோன்ற பெரிய ஒப்பந்தத்தில், இந்தியா இது வரைகையெழுத்திட்டதில்லை.
மேலும் கூடங்குளத்துக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக அடுத்த மாதத்தில் மிகப் பெரிய ஒப்பந்தத்திலும்இந்தியா கையெழுத்திட உள்ளது.
மார்ச் 31க்குள் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கட்டுமானப் பணி முடிந்து விடும். அப்போது ரஷ்யாவின்அணு மின்நிலைய அமைச்சர் அலெக்சாண்டர் ரூமயன்ட்சேவ் இந்தியாவுக்கு வருவார் என்று சதுர்வேதி கூறினார்.












Click it and Unblock the Notifications