ஜெ.க்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ள புதிய நீதிக் கட்சி, அவர் மீண்டும் முதல்வர்ஆனால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லது என்று அக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.

அவ்வப்போது அணி மாறும் பெரிய கட்சிகளுக்கு மத்தியில் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போலதிமுக அணியிலிருந்து அவர்களாகவே வெளியேறி, ஆதரவு கேட்காத நிலையிலும் அதிமுகவுக்கு ஆதரவுஅளிப்பதாக அவர்களாகவே கூறிக் கொண்டுள்ள புதிய நீதிக் கட்சி வரும் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில்ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஆட்சிப் பொறுப்பை நடத்த வேண்டிய கடமைஅதிமுகவிற்கு உண்டு. அதன்படி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வர் ஆகும் பொருட்டுமக்கள் உத்தரவைப் பெறுவதற்காக ஆண்டிப்பட்டியில் போட்டியிடுகிறார்.

ஜெயலலிதா முதல்வர் ஆவதே தமிழகத்திற்கு நல்லது. ஜெயலலிதாவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தஎதிர்க்கட்சிகளால் முடியவில்லை. எனவேதான் தேர்தல் புறக்கணிப்பு, தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்றுஅவை கூச்சலிடுகின்றன.

குடியாத்தம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட காமராஜருக்கு ஆதரவு தெரிவித்தார் பேரறிஞர் அண்ணா. அந்தப்பண்பை மதித்து தற்போதைய தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க புதிய நீதிக் கட்சி கடமைப்பட்டுள்ளது.

அதிமுகவை ஆதரிப்பதால் நாங்கள் அந்தக் கட்சியுடன் இணைந்து விடுவோம் என்று அர்த்தம் இல்லை. அப்படிக்கருதுபவர்கள் பத்தாம் பசலிகள்.

ஆண்டிப்பட்டி தொகுதிவாழ் பிள்ளைமார்கள், வேளாளர்கள், முதலியார்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் சண்முகம் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+