For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க கோரும் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அத்தொகுதி திமுகவேட்பாளரான வைகை சேகர் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி தொகுதி வாக்காளர் பட்டியலில் 17,000க்கும் மேற்பட்ட கள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்என்றும் எனவே இந்த முறைகேடு சரிசெய்யப்படும் வரை அங்கு இடைத் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி வைகை சேகர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் தவறு நடைபெற்றிருந்தாலும், தேர்தல் தேதி முறையாக அறிவிக்கப்பட்டுஅதற்கான நடவடிக்கைகளும் சுறுசுறுப்பாக நடந்து வருவதால் இப்போதைக்கு மேற்கொண்டு எங்களால் ஒன்றும்செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறிவிட்டது.

தேர்தல் கமிஷனின் இந்த நிலையை நீதிபதி மன்மோகன் சரீனிடம் அதன் சார்பில் ஆஜரான எஸ்.கே. மேந்திரட்டாகூறினார்.

அரசியல் சட்டம் 329வது பிரிவின்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதனுடைய நடவடிக்கைகளில்நீதிமன்றம் தலையிட முடியாது என்று ஆண்டிப்பட்டி தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா சார்பில்வாதாடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறினார்.

ஆனால் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது குறித்து 329வது பிரிவு எதுவும் சொல்லவில்லை என்று வைகைசேகர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் லேகி கூறினார்.

முத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மன்மோகன் சரீன், இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X