மத்திய அரசு ஊழியர் கொலை: கொலையாளிகள் சரண்
சென்னை:
சென்னையில் நடுரோட்டில் மத்திய அரசு ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 2 பேர்விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்தனர்.
சென்னை அசோக்நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஏகாம்பரம் (45). இவர் ஒரு சமூக சேவகர். இவர் கடந்த சிலதினங்களுக்கு முன்பு அவர் அலுவலகம் இருக்கும் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது,ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று இவரை வெட்டிக் கொன்றது.
ஏகாம்பரத்தை கொன்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த கொலையில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடிக்கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பூமிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலரைபோலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கே.கே. நகரைச் சேர்ந்த வெற்றி (29), பஞ்சநாதன் ஆகிய 2 பேரும்விழுப்புரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
இவர்கள் 2 பேரையும் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கஉத்தரவிட்டார். எனவே இருவரும் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications