32 வழக்குகள், 10 ஆண்டு சிறைவாசம் பெற்றும் திருந்தாத சிறைப் பறவை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

10 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு சமீபத்தில்தான் விடுதலையான கைதி, கோவிலில் பெருமாள்சிலையைத் திருடிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 32 வழக்குகள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.

சென்னையைச் சேர்ந்தவர் கேசவன். இவர் ஒரு பிரபல திருடன். அடிக்கடி கோவில்களில் சிலையைத் திருடுவதுதான்இவரது முக்கிய தொழில். இதுதவிர சில்லறைத் திருட்டுக்களையும் உபரியாக செய்து வந்தார்.

இவர் மீது 32 வழக்குகள் உள்ளன. இவற்றில் சில வழக்குகளில் 10 ஆண்டு காலம் தண்டனை பெற்று சிறையில்இருந்தார் கேசவன். சமீபத்தில் இவர் விடுதலையானார்.

விடுதலையான பிறகும் கேசவன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. வழக்கம் போல முகப்பேர் பகுதியில் உள்ளஒரு கோவிலில் பெருமாள் சிலையைத் திருடிக் கொண்டு சென்று விட்டார்.

அவர் மீது சந்தேகப்பட்ட சிலர் போலீஸில் புகார் செய்தனர். அதன் பேரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலைஅவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் பெருமாள் சிலையை திருடியதை கேசவன் ஒப்புக்கொண்டார்.

அவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெருமாள் சிலை மீட்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சிறையில்அடைக்கப்பட்டார் கேசவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+