ஆண்டிப்பட்டியை இந்தியாவிலேயே முதல் தொகுதியாக்குவேன்: ஜெ.
தேனி:
ஆண்டிப்பட்டியை இந்தியாவிலேயே முதன்மையான தொகுதியாக மாற்றுவேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
ஆண்டிப்பட்டியின் அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா, புதன்கிழமை கண்டமனூரில் தனது பிரச்சாரத்தைதுவக்கினார். அவர் கண்டமனூர், அண்ணாநகர், அய்யனார்புரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சென்று திறந்தஜீப்பில் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா வேசியதாவது:
நாட்டின் மிகவும் பின் தங்கிய தொகுதியான ஆண்டிப்பட்டியை இந்தியாவின் முதன்மையான தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். நாட்டின் முதன்மையான தொகுதி ஆண்டிப்பட்டி என்று வரலாற்றில் இடம் பெறும் வகையில்பாடுபடுவேன்.
நியாயவிலைக்கடை அரிசி விலை, இலவச மின் திட்டம் போன்றவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் உங்களிடம்பொய்யாக பிரச்சாரம் செய்துள்ளனர். அவற்றை நம்பாதீர்கள். ரேஷன் அரிசி விலையை ஏற்ற மாட்டேன்.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்குக் குடும்ப அட்டைகளை விரைவில் வழங்க ஏற்பாடு செய்வேன்.
ஆண்டிப்பட்டியில் அரசுக் கலைக் கல்லூரி விரைவில் அமைக்கப்படும். அதே போல் தேனி மாவட்ட மக்களின்நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரியை விரைவில் உருவாக்குவேன்.
முந்திரி ஆலை உட்பட பல புதிய தொழிற்சாலைகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று ஜெயலலிதாபிரச்சாரத்தின்போது உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications