விவசாயிகளிடம் கமிஷன் வாங்கும் அரசு அதிகாரிகள்: இளங்கோவன் குற்றச்சாட்டு
சென்னை:
நெல் கொள்முதல் செய்வதற்காக காவிரி டெல்டா விவசாயிகளிடமிருந்து அரசு அதிகாரிகள் கமிஷன் வாங்குவதாகதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இதுகுறித்து நிருபர்களிடம் இளங்கோவன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறியதாவது:
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகளிடம் நெல்லை நேரடியாகக் கொள்முதல் செய்யாமல், வியாபாரிகளிடம்மட்டுமே தமிழக அரசு கொள்முதல் செய்கிறது.
இதனால் விவசாயிகளுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்படுகிறது. ஏற்கனவே வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கியுள்ளதால்கஷ்டப்படும் விவசாயிகள், தற்போது மேலும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
அப்படியே விவசாயிகள் நேரடியாகக் கொள்முதல் செய்தாலும் அதற்காக அவர்களிடமிருந்து அரசு அதிகாரிகள்கமிஷன் பெற்றுக் கொண்டுதான் நெல்லைக் கொள்முதல் செய்து கொள்கிறார்கள்.
கமிஷன் வாங்கும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications