பெங்களூர்-மதுரை ரயிலில் மது பாட்டில்களைக் கடத்தியவர் கைது
மதுரை:
பெங்களூரிலிருந்து மதுரை வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றைக்கடத்திய ஒரு வாலிபரும் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (வியாழக்கிழமை) காலை 7.35 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது.
அந்த ரயிலிலிருந்து சரக்கு பார்சல்கள் இறக்கப்பட்டன. அப்போது ஒரு பார்சல் மீது ரயில்வே போலீசாருக்குச்சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அந்தப் பார்சலைப் பிரித்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் மது பாட்டில்கள் இருப்பதைஅவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த மது பாட்டில்களைக் கொண்டு வந்த கதிரேசன் (25) என்ற தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நபரைப்போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் இந்த மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக அவற்றைக் கதிரேசன் கடத்திக்கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் கதிரேசனால் கடத்தப்பட்ட 88 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications