சிகிச்சைக்கு சென்றபோது ஆபாசப்படம் எடுத்தார்: பெண்கள் வாக்குமூலம்
சென்னை:
எலும்பு முறிவு சிகிச்சைக்கு சென்றபோது, எங்களை மிரட்டி டாக்டர் நிர்வாணப்படம் எடுத்ததாக பாதிக்கப்பட்ட 2பெண்கள் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெண்கள், இளைஞர்களை வைத்து ஆபாசப் படம் எடுத்ததாக டாக்டர் பிரகாஷை போலீசார் கைது செய்துசென்னை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் அவரிடம் நர்சாக பணிபுரிந்த சித்ரா என்பவர் சில தினங்களுக்கு முன்பு போலீசில் சரணடைந்தார்.இவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆபாசப்படங்களில் நடித்த 2 பெண்களும், ஒரு வியாபாரியும் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்கொடுத்துள்ளனர். இது தவிர பெண் புரோக்கர் ஒருவரும் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதில் சென்னை கே.கே. நகரை சேன்ற உமா என்பவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாவது:
நான் எலும்பு முறிவு சிகிச்சைக்காக டாக்டர் பிரகாஷிடம் சென்றேன். அவர் என்னை எக்ஸ்ரே எடுப்பதற்காக தனிஅறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படத்தை எடுத்துவிட்டார்.
பின்னர் அந்தப் படத்தைக் காட்டிஎன்னை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்தார் என்று உமா தனது வாக்குமூலத்தில்கூறியுள்ளார். இதே போல் ராமாவரத்தைச் சேர்ந்த புவனா என்ற பெண்ணும் தெரிவித்துள்ளார்.
எலும்பு முறிவு சிகிச்சைக்கு வந்தபோது, எனக்கு பெண்ணாசைக் காட்டி, ஆபாசப்படத்தில் நடிக்க வைத்தார் என்றுவியாசர்பாடியைச் சேர்ந்த இக்பால் என்ற வியாபாரி ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications