26,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெ. வெற்றி: மாணவர்கள் கருத்துக்கணிப்பு
தேனி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து சென்னை லயோலா கல்லூரி பண்பாடுமக்கள் தொடர்பகமும், காட்சி தகவல் இயல் துறையும் இணைந்து கருத்து கணிப்பு ஒன்றை நடத்தின.
இதற்காக 11 பேர் கொண்ட குழு ஒன்று ஆண்டிப்பட்டி சென்று ஆய்வு செய்தது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகுறித்து கல்லூரி முதல்வர் ஜோசப் சேவியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்படி தொகுதியின் அனைத்து கிராமங்களும் 6 வட்டமாக பிரிக்கப்பட்டு, வட்டத்துக்கு 4 கிராமங்கள் வீதம்24 கிராமங்களிலும், ஆண்டிப்பட்டி நகரிலும் 1,208 பேர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் 68.9 சதவீதம் பேர் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். திமுகவுக்கு 17.9 சதவீதம்பேரும், மதிமுகவுக்கு 2.3 சதவீதம் பேரும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறினர்.
46.7 சதவீதம் பேர் அதிமுகவுக்கும், 33.4 சதவீதம் பேர் திமுகவுக்கும், 9.3 சதவீதம் பேர் மதிமுகவுக்கும், 3 சதவீதம்பேர் புதிய தமிழகம் கட்சிக்கும், 7.6 சதவீதம் பேர் பிற வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கப் போவதாககூறியுள்ளனர்.
திமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்தவர்களில் 45.5 சதவீதம் பேர் அதிமுக தான் வெற்றி பெறும் என்கின்றனர்.பெண்கள் மிக அதிகமான அளவில் அதிமுகவை சார்ந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை அதிமுகவால் தான் தீர்க்க முடியும் என்றுபெரும்பாலான வாக்காளர்கள் கருதுகிறார்கள்.
ஆண்டிப்பட்டி தொகுதி மக்களின் கருத்துப்படி அதிமுகவின் வெற்றி நிச்சயமானது. குறைந்தபட்சம் 26,000வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்.
ஜெயலலிதா மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் தன்மைக்கு ஏற்பவும், தேர்தல் நாளன்று பதிவாகப் போகும்வாக்குகளுக்கு ஏற்பவும் இந்த வித்தியாசம் பல மடங்கு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கையில்ஜோசப் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications