பட்டாசு தயாரிப்பாளர்கள் 19ம் தேதி பந்த்
சிவகாசி:
பட்டாசுத் தொழிற்சாலைகள் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துகின்றனர் என்று சில தன்னார்வத் தொண்டுஅமைப்புகள் குற்றம் சாட்டுவதை எதிர்த்து வரும் 19ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் பந்த் நடத்த பட்டாசுத்தொழிற்சாலை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றம் அச்சகங்களில் சிறுவர்களைவேலைக்குச் சேர்த்து கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது அடிக்கடி வரும் செய்தி.
இதை எதிர்த்து பல தன்னார்வத் தொண்டு அமைப்புகள் அடிக்கடி போராட்டமும் நடத்தி வருகின்றன.
ஆனால் சிவகாசி மற்றும் சாத்தூரில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அச்சகங்களில்இதுபோன்று சிறுவர்களைத் தங்கள் தொழிற்சாலை வேலைகளில் ஈடுபடுத்துவதில்லை என்று பட்டாசுத்தொழிற்சாலை அதிபர்கள் கூறுகின்றனர்.
எனவே தங்கள் மீது குற்றம் சுமத்தும் இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்புகளை எதிர்த்து வரும் 19ம் தேதிவிருதுநகர் மாவட்டத்தில் பந்த் நடத்த பட்டாசுத் தொழிற்சாலை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பட்டாசுத் தொழிற்சாலை ஊழியர்களும் பொதுமக்களும் இந்த பந்த்தில் கலந்து கொண்டு அன்று நடக்கும்பேரணியிலும் கலந்து கொள்வார்கள் என்று பட்டாசுத் தொழிற்சாலை சங்கத்தின் பொதுச் செயலாளரான அசோகன்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications