தங்கபாலுவுக்கு தமிழக காங்கிரஸ் நோட்டீஸ்
ஈரோடு:
ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிப்பது காங்கிரஸின் கடமை என்று கூறிய தங்கபாலு அடுத்த ஒரு வாரத்திற்குள்இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ். இளங்கோவன் இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸுக்கு தார்மீக அடிப்படையில் பொறுப்புள்ளதுஎன்று காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு நேற்று கூறியிருந்தார்.
இது குறித்து ஈரோட்டில் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்கும்படி தங்கபாலு கூறியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்று கட்சி அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. 7நாட்களுக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கட்சி மேலிடத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று இளங்கோவன் கூறினார்.
ஜெயலலிதாவை ஆதரித்துப் பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகரான கே. பார்த்தசாரதிநேற்றுதான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications