திமுகதான் என்னை ஆதரிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி பதிலடி
தேனி:
திமுகதான் எங்களை ஆதரிக்க வேண்டும், நாங்கள் அவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று புதிய தமிழகம் கட்சிதலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் மதிமுகவும், புதிய தமிழகம் கட்சியும் போட்டியிலிருந்து விலகி திமுகவுக்குஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்துகிருஷ்ணசாமி கூறியதாவது:
இந்த செய்தியை நான் பத்திரிக்கைகளில் பார்த்தேன். திமுகவிலிருந்து இது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை.
ஆண்டிப்பட்டி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளரை அறிவிக்க மற்ற கட்சிகள் தடுமாறியபோது, எங்கள்கட்சி வலியுறுத்தியதால் நான் போட்டியிடுவதாக அறிவித்தேன்.
சென்னையில் கருணாநிதி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து என்னை ஆதரிக்கும்படி கேட்டேன்.ஆனால் காலம் கடந்து விட்டதாக அப்போது கருணாநிதி கூறினார்.
மேலும் ஆண்டிப்பட்டியில் கடந்த 10 நாட்களாக என்னை குற்றம் சாட்டியே திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. 7மாதங்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்த என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் திமுகவின் பிரச்சாரத்தால்இங்குள்ள தலித்துகள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவின் ஒத்துழைப்பு எங்களுக்கு இல்லை. எனவே,அதை நிவர்த்தி செய்யும்விதத்தில் ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளரை வாபஸ் பெற வைத்து என்னை வெற்றி பெறச் செய்வதே தலித்மக்களுக்கு கருணாநிதி செய்யும் நன்றிக் கடன்.
ஆண்டிப்பட்டியில் திமுகவுக்கு எங்களுடைய ஆதரவு இல்லை. திமுகதான் எங்களை ஆதரிக்க வேண்டும் என்றுகிருஷ்ணசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications