சென்னை மியூசியத்துக்கு ரூ.77 லட்சம் செலவில் நவீன பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்புக்காக ரூ.77 லட்சம் செலவில் க்ளோஸ் சர்க்யூட் கேமரா உட்பட பலமின்னணு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ளது அரசு அருங்காட்சியகம். இங்கிருந்த 2000 ஆண்டு பழமையான,சுண்ணாம்புக்கல்லில் செய்த புத்தர் சிலையின் தலையை சமீபத்தில் யாரோ சிலர் துண்டித்து சென்று விட்டனர்.

இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விசாரிப்பதற்காகதம்பித்துரை சென்னை அரசு அருங்காட்சியகத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை சென்றார்.

அங்கு சிலை இருந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் அருங்காட்சியக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த சிலையின் தலை இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிலரின் உதவியுடனே கடத்திச் சென்றிருக்கப்பட்டிருக்கவேண்டும்.

அருங்காட்சியகத்தின் பாதுகாப்புக்காகவும், ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலும்,அருங்காட்சியகத்தில் ரூ.77 லட்சம் செலவில் க்ளோஸ் சர்க்யூட் கேமரா உட்பட பல மின்னணு இயந்திரங்கள்அமைக்கப்படும்.

மேலும் சுற்றுச் சுவர்கள் உடைந்துள்ளன. இவற்றை உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெறும் என்று தம்பித்துரைகூறினார்.

சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலை இந்த அருங்காட்சியகத்தில்தான்வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+