சத்து மாத்திரை வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைப்பு
சென்னை:
தமிழகத்தில் 50 லட்சம் வளர் இளம் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் இரும்புச் சத்து மாத்திரை கொடுக்கும் திட்டம்தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை தெவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்ட பல பெண்கள் மாநிலத்தில் ஆங்காங்கே வாந்தி ஏற்பட்டுமயங்கி விழுந்தது குறித்து மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாகளுடன் அமைச்சர் செம்மலை இன்று(திங்கள்கிழமை) காாலை விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தத் திட்டத்தை இனிமேல் சுகாதாரத்துறையினரே செயல்படுத்தவுள்ளனர். இதில் பயிற்சி பெறாத சிலரைஈடுபடுத்தியதால் இந்தக் குழப்பங்கள் ஏற்பட்டு விட்டன.
இரும்புச் சத்து மாத்திரையை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து சுகாதாரத்துறையினருக்கு பயிற்சிகொடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி முடிய சில மாதங்கள் ஆகலாம்.
எனவே அது வரை இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படும்போது ஆங்காங்கே தவறுகள் நேரிடலாம். எனவே இதைபெரிதுபடுத்தத் தேவையில்லை.
பகல் உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகே இந்த இரும்புச் சத்து மாத்திரையை வழங்க வேண்டும்.அதற்கு முன்பே வழங்கப்பட்டதால்தான் சில பெண்கள் வாந்தி எடுத்துள்ளனர் என்று செம்மலை கூறினார்.












Click it and Unblock the Notifications