தர்மபுரி: கோவில் காவலாளியை கொன்று உண்டியல் பணம் கொள்ளை
தர்மபுரி:
தர்மபுரி கோட்டை கோவிலில் காவலாளியை வெட்டிக் கொன்று உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்தவர்களைபோலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரியில் புகழ் பெற்ற கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவலாளியாகமுன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலையும் (62), துப்புரவுத் தொழிலாளியாக மங்கம்மாள் (45) என்பவரும்வேலை பார்த்து வந்தனர்.
திங்கள்கிழமை இரவில் அண்ணாமலை கோவிலில் உள்ள 16 கால் மண்டபத்தில் உண்டியல் அருகே படுத்துஇருந்தார். மங்கம்மா மற்றொரு பகுதியில் படுத்திருந்தார்.
அதிகாலை 4 மணிக்கு கோவிலில் நுழைந்த கொள்ளையர்கள் அரிவாளால் அண்ணாமலையை சரமாரியாகவெட்டியுள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு எழுந்த மங்கம்மாவின் முகத்தைத் துணியால் மூடிஅமுக்கியுள்ளனர். இதனால் அவரும் மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் தங்கக் காசுகளைகொள்ளையடித்து சென்று விட்டனர். காலையில் கோவிலை திறந்தவர்கள் அண்ணாமலை உயிருக்குபோராடியதைக் கண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை இறந்தார். தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படைஅமைத்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications