சென்னையில் கடும் பனிமூட்டம்: விமானங்கள் தாமதம்
சென்னை:
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நிலவிய கடுமையான பனிமூட்டத்தையடுத்து டெல்லிக்குசெல்லும் விமானங்கள் தாமதமாக சென்றன.
இன்று காலை சென்னையில் வழக்கத்தை விட பனிமூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. காலை 7.30 மணி வரைஎதிரே யார் வருகிறார்கள் என்றுகூடத் தெரியாத அளவுக்குப் பனி மூடியிருந்தது.
சென்னை விமானத்திலும் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியதால் விமானப் போக்குவரத்து முழுவதுமாகப்பாதிக்கப்பட்டது.
இதனால் டெல்லிக்கு செல்லும் விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லவில்லை. இதே போல் டெல்லியிலிருந்துசென்னைக்கு வரும் விமானமும் தாமதமானது.
இதனால் 2 மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 6 மணிக்கே புறப்பட வேண்டிய டெல்லிவிமானம், 8 மணிக்குத்தான் கிளம்பிச் சென்றது.
பொதுவாக ஜனவரி மாதத்தில்தான் இத்தகைய பனிமூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பிப்ரவரி மாதம்முடியப்போகும் நிலையில்கூட பனிமூட்டம் நிலவியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.