24ம் தேதி வாக்கு எண்ணிக்கை: 3 மணி நேரத்தில் முடிவு தெரியும்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை (24ம் தேதி) நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 3 மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்துவிடும்என்று தெரிகிறது. மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடப்பதால் முடிவுகளும் மிக வேகமாகவெளியாகிவிடும்.
ஆண்டிப்பட்டியில் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சாவடியிலும் 2 வாக்குப் பதிவுஎந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 432 வாக்குப் பதிவு எந்திரங்களில் வாக்குகள் எண்ணப்படவேண்டும்.
3 மணி நேரத்தில் முடிவு தெரிந்து விடும் என்பதால், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா வென்றால் அன்றைய தினமேமீண்டும் முதல்வராகப் பதவியேற்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வாக்குப் பதிவு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் தான் வென்றுவிடுவோம் என்பதில் அதீத நம்பிக்கையில்இருக்கிறார் ஜெயலலிதா.
தனது பதவியேற்பு விழாவுக்கு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மண்டபத்தை தயார் செய்யவும்ஜெயலலிதா உத்தரவிட்டுவிட்டார். அந்த மண்டபம் கடந்த இரண்டு நாட்களாக மாபெரும் அலங்காரங்களுடன் தயாராகிவருகிறது.












Click it and Unblock the Notifications