நக்கீரன் நிருபர் கோர்ட்டில் ஆஜர்
பவானி:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் பவானி நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்.
பவானியை அடுத்த வெள்ளித் திருப்பூர் போலீஸ் நிலையத்தை கடந்த 1998ம் ஆண்டு சந்தனக் கடத்தல்வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் தாக்கி, அங்கிருந்த ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த வழக்கில் சிவசுப்ரமணியத்தையும் குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைபவானி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசுப்ரமணியத்தை, புதன்கிழமை மாலை பவானி நீதிமன்றத்தில் நீதிபதிகிருஷ்ணன் முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்தினர்.
அப்போது போலீசார், பர்கூர் ஈரெட்டி மலையை சேர்ந்த கந்தவேல் கொலை வழக்கில் அவருக்கு தொடர்புஇருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது, எனவே அவரை போலீஸ் காவலில் விட வேண்டும் என்று போலீசார் மனுகொடுத்தனர்.
இது குறித்து சிவசுப்ரமணியத்தை போலீசார் காவலில் செல்ல விருப்பமா என்று நீதிபதி கேட்டார். ஆனால்,எனக்கும் அந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, போலீஸ் காவலில் செல்ல விருப்பமில்லை என்றுசிவசுப்ரமணியம் கூறினார்.
அதையடுத்து அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி கூறினார். எனவேசிவசுப்ரமணியத்தை போலீசார் இன்று மீண்டும் ஆஜர் படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications