For Daily Alerts
Just In
ரஷ்யாவிடம் லேசர் குண்டுகள் வாங்கும் இந்தியா
மாஸ்கோ:
ரஷ்யாவிடம் இருந்து 8,000 லேசர் குண்டுகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
ஆர்ட்டிலரி எனப்படும் கனரக துப்பாக்கிகளில் இந்தக் குண்டுகள் பயன்படுத்தப்படும்.
க்ராஸ்னபோல் என்ற இந்த குண்டுகளை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந் நாட்டின்செய்தி நிறுவனமான ரஸ்பால்ட் தெரிவித்துள்ளது. இந்த குண்டுகளை ரஷ்யாவின் லோமோ என்ற நிறுவனம்தயாரித்து வழங்கவுள்ளது.
இந்த குண்டுகளை வாங்க இந்தியா ரூ. 300 கோடி செலவிடவுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்னாண்டசுக்கும், ரஷ்யஅதிகாரிகளுக்கும் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.
Comments
Story first published: Thursday, February 21, 2002, 5:30 [IST]