சென்னையில் இரட்டையர்களுக்கு ஒரு சங்கம்
சென்னை:
சென்னையில் இரட்டையர்கள் சிலர் இணைந்து புதிய சங்கத்தைத் துவக்கியுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராமலிங்கத்தின் முயற்சியின் பேரில் இந்த சங்கம்துவக்கப்பட்டுள்ளது. இரட்டையர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டது இந்த சங்கம்.
தென்னிந்தியாவில் இதுபோன்ற இரட்டையர் சங்கம் இதுவரை இல்லை. இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த இரட்டையர் சங்கத்தின் துவக்க விழா புதன்கிழமை சென்னையில் நடந்தது. டாக்டர்கள் ராமலிங்கம்,லட்சுமணசாமி, ஜமீலா ரோஸ், ஜமீலா ரவீந்திரன், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரஞ்சித், பாரத், ரம்யா,லாவண்யா ஆகியோர் உள்ளிட்ட பல இரட்டையர்கள் இதில் கலந்து கொண்டனர்.
வந்திருந்த இரட்டையர்களுக்கு பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசுகளும் வழங்கப்பட்டன. அதில்முக்கியமான போட்டி, இரட்டையர்களின் மனதறியும் போட்டி.
இதன்படி இரட்யைர்களிடம் தனித்தனியாக ஒரே கேள்வி கேட்கப்படும். அதில் அவர்கள் ஒரேமாதிரியாக பதில்சொன்னால் அவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.
இந்த இரட்டையர் சங்கத்தின் மூலம் பல்வேறு விதமான சேவைகளைச் செய்யவுள்ளதாக டாக்டர் ராமலிங்கம்,அவரது சகோதரர் லட்சுமண சாமியும் கூறினர்.