நாடாளுமன்றத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு
டெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி துவங்கவிருப்பதையடுத்து அங்கு வரலாறு காணாதஅளவுக்குப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த குளிர்காலக் கூட்டுத் தொடரின்போதுதான் டிசம்பர் 13ம் தேதி 5 கார்களில் வந்த பாகிஸ்தான்தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினர்.
வி.ஐ.பிக்களைப் போல சிவப்பு சைரன் பொருத்திய வெள்ளை அம்பாசடர் காரில் இந்தத் தீவிரவாதிகள் வந்ததால்,வெளிப்புறக் காவலாளிகளால் இவர்கள் நுழைவதைத் தடுக்க முடியவில்லை.
ஆனாலும் நாடாளுமன்றத்தின் உள்பகுதியில் இருந்த பாதுகாப்புப் போலீசார் சுதாரித்துக் கொண்டு 5தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்று விட்டனர். அங்கு நடந்த பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில் 10க்கும்மேற்பட்ட போலீசாரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு கொல்லப்பட்ட பாதுகாப்பு போலீசாருக்கு இரங்கல் தெரிவிக்க நாடாளுமன்றம்கூடியது. அதன் பிறகு இப்போதுதான் பட்ஜெட்டுக்காக நாடாளுமன்றம் வரும் 25ம் தேதி கூடவுள்ளது.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் பாதுகாப்பு வரலாறு காணாத அளவுக்குத்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் பாரா மிலிட்டரி படையைச் சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும்நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளியே ஆங்காங்கே பதுங்கு குழிகளும் தோண்டப்பட்டு அங்கு போலீசார்காவலுக்கு நின்று கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் சுற்றுச் சுவர்களில் இரும்புக் கம்பி வலைகளும் போடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின்வாசலிலிருந்து பிரதானக் கட்டடம் வரை ஆங்காங்கே இரும்பு மற்றும் செங்கற்களால் ஆன தடைகள்அமைக்கப்பட்டுள்ளன.
விஜய் செளக்கில் உள்ள நுழைவாயில் வழியாக பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, துணைஜனாதிபதி கிருஷ்ண காந்த் மற்றும் "இசட்" பாதுகாப்பு பெற்ற வி.ஐ.பிக்கள் மட்டும்தான் நாடாளுமன்றத்தினுள்நுழைய முடியும்.
நாடாளுமன்றத்தில் உயிரிழந்த போலீசாருக்கு நினைவுச் சின்னம்:
இந்நிலையில் நாடாளுமன்றத் தாக்குதலின்போது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்காக நாடாளுமன்றவளாகத்தில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் 11 மற்றும் 12 ஆகிய எண்கள் கொண்ட நுழைவு வாயில்களுக்கு இடையில் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.
வரும் 25ம் தேதி கிருஷ்ண காந்த் இந்த நினைவுச் சின்னத்தைத் திறந்து வைக்க உள்ளார்.
கயாவில் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதி கைது:
இதற்கிடையே பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரில் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதி ஒருவனைப் போலீசார் கைது செய்தனர்.
முகம்மது நஜீப் என்ற அந்தத் தீவிரவாதியிடமிருந்து 2 பாங்க் பாஸ் புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.
பல வழக்குகள் தொடர்பாக நஜீப் தேடப்பட்டு வந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.