தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) பக்ரீத் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
முஸ்லிம்களின் பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இதை ஈகை திருநாள் என்றும் கூறுவர். இந்த நாளில் தான்பெரும்பான்மையான முஸ்லிம்கள் மெக்காவுக்கு சென்று வழிபடுவர்.
பக்ரீத்தை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையிலும், திருவல்லிக்கேணியில் உள்ளமசூதியிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. மெரீனா கடற்கரையில் நடந்த சிறப்பு தொழுகைக்குநூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
திருச்சி, வாணியம்பாடி, வேலூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளிலும் இதேபோன்ற சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
பாண்டிச்சேரியில் உள்ள மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. துணை நிலை ஆளுநர் ரஜினிராய்,முதல்வர் ரங்கசாமி உட்பட பல தலைவர்களும் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications