3வது அணிக்கு தலைமை ஏற்கத் தயார்: சுவாமி
சென்னை:
3வது அணி அமைந்தால் அதற்கு தலைமை ஏற்க ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர்சுப்பிரமணியம் சுவாமி இன்று (சனிக்கிழமை) கூறினார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவது எங்கள் கட்சிதான். அதனால் 3வது அணி அமைந்தால்அதற்கு நான் தலைமை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.
முதலில் 3வது அணிக்குத் தேவையான பொதுவான கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து முடிவு செய்யவேண்டும். 3வது அணி அமைப்பதற்கான நல்ல சூழ்நிலை ஆண்டிப்பட்டியில் உருவானது. ஆனால் அதை மற்றகட்சிகள் சரிவர பயன்படுத்தவில்லை.
டான்சி வழக்கில் நான் செய்துள்ள அப்பீல் எனக்கு சாதகமாகத்தான் முடியும். ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில்வெற்றி பெற்று முதல்வரானாலும், டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின் மீண்டும் பதவி விலக நேரிடும்.
இந்தியப் பொருளாதாரத்தை காரணம் காட்டி ஊழியர்களைக் குறைப்பதற்கு இது சரியான தருணம் அல்ல.ஊழியர்களைக் குறைத்தால் தொழிற்சாலைகள் சரிவடைந்து விடும். மேலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகஅளவில் உருவாகும் சூழ்நிலை ஏற்படும்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தேவையற்றது. இதனால்ஒன்றும் இரு தரப்பினருக்குமிடையே சமாதானம் தோன்றாது.
அயோத்தி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்தே நிலத்தை கொடுப்பது பற்றி முடிவெடுக்கவேண்டும். அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்துக்களின் வழக்கப்படி முதல் குழந்தை, அந்த குழந்தையின் தாயின் சொந்த ஊரிலேதான் பிறந்திருக்க முடியும்.அதன்படி பார்த்தால் ராமரின் தாயான கெளசல்யாவின் சொந்த ஊரான பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலாவில்தான்ராமர் பிறந்திருக்க வேண்டும் என்று சுப்ரமணிய சுவாமி கூறினார்.