3வது அணிக்கு தலைமை ஏற்கத் தயார்: சுவாமி
சென்னை:
3வது அணி அமைந்தால் அதற்கு தலைமை ஏற்க ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர்சுப்பிரமணியம் சுவாமி இன்று (சனிக்கிழமை) கூறினார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவது எங்கள் கட்சிதான். அதனால் 3வது அணி அமைந்தால்அதற்கு நான் தலைமை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.
முதலில் 3வது அணிக்குத் தேவையான பொதுவான கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து முடிவு செய்யவேண்டும். 3வது அணி அமைப்பதற்கான நல்ல சூழ்நிலை ஆண்டிப்பட்டியில் உருவானது. ஆனால் அதை மற்றகட்சிகள் சரிவர பயன்படுத்தவில்லை.
டான்சி வழக்கில் நான் செய்துள்ள அப்பீல் எனக்கு சாதகமாகத்தான் முடியும். ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில்வெற்றி பெற்று முதல்வரானாலும், டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின் மீண்டும் பதவி விலக நேரிடும்.
இந்தியப் பொருளாதாரத்தை காரணம் காட்டி ஊழியர்களைக் குறைப்பதற்கு இது சரியான தருணம் அல்ல.ஊழியர்களைக் குறைத்தால் தொழிற்சாலைகள் சரிவடைந்து விடும். மேலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகஅளவில் உருவாகும் சூழ்நிலை ஏற்படும்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தேவையற்றது. இதனால்ஒன்றும் இரு தரப்பினருக்குமிடையே சமாதானம் தோன்றாது.
அயோத்தி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்தே நிலத்தை கொடுப்பது பற்றி முடிவெடுக்கவேண்டும். அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்துக்களின் வழக்கப்படி முதல் குழந்தை, அந்த குழந்தையின் தாயின் சொந்த ஊரிலேதான் பிறந்திருக்க முடியும்.அதன்படி பார்த்தால் ராமரின் தாயான கெளசல்யாவின் சொந்த ஊரான பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலாவில்தான்ராமர் பிறந்திருக்க வேண்டும் என்று சுப்ரமணிய சுவாமி கூறினார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications