மீண்டும் திறக்கப்பட்டது வண்டலூர் உயிரியல் பூங்கா

Subscribe to Oneindia Tamil

வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (சனிக்கிழமை) காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியுடன்உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்க்க வந்தவண்ணம் உள்ளனர்.

மர்ம விலங்கு நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வண்டலூர் பூங்கா மூடப்பட்டிருந்தது. மர்மவிலங்கு பிடிபடாமல் இருக்கும் நிலையில் அந்த விலங்கு அருகில் உள்ள காட்டுக்குள் புகுந்து விட்டதாகவிலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அந்த மர்ம விலங்கு சிறுத்தைதான் என்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த சிறுத்தைஇரவில் மட்டுமே உயிரியல் பூங்காவிற்குள் வருகிறது. பகலில் காட்டுக்குள் சென்று விடுகிறது என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து பூங்காவை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. பூங்கா இயக்குநர் தியாகி மற்றும் பிற வனஅதிகாரிகளின் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று முதல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. நடமாடும் சிறுத்தையால் ஆபத்து இல்லை என்றும்பார்வையாளர்கள் பயமின்றி பூங்காவிற்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரியல் பூங்காவைகாண மக்கள் கூட்டம் திரண்டு வந்து கொண்டிருக்கிறது.

"சிங்கமோ சிறுத்தையோ காணாமல் போனதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் நாங்கள் தைரியமாகவேவந்துள்ளோம்" என்று இன்று பூங்காவுக்கு வந்த பார்வையாளர்களில் சிலர் தெரிவித்தனர்.

பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக பூங்காவின் உள்ளே கூடுதலாக ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+