18 சுற்றுகளாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் பலத்த பாதுகாப்புக்கு இடையே வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இங்குள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் இந்த வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
216 வாக்குச் சாவடிகளில் இருந்த 432 மின்னணு எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.மொத்தம் 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்.
அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் தலைமையில்ஏஜெண்டுகள் அந்த வாக்குப் பதிவு மையத்தில் எண்ணிக்கையை கண்காணித்து வருகின்றனர்.
திமுக வேட்பாளர் வைகை சேகர் தலைமையில் திமுகவினரும் இந்த வாக்குப் பதிவு மையத்தில் குழுமியுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை அறிய ஆயிரக்கணக்கான பொது மக்களும் இந்த மையத்தின் வெளியேகூடியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அவ்வப்போது ஒலிப் பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டவண்ணம்உள்ளன.
இந்த வளாகத்தைச் சுற்றி மோப்ப நாய்கள், ஆயுதங்களுடன் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான நிருபர்கள், புகைப்படக் கலைஞர்களும் இங்கு குழுமியுள்ளனர்.