தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி பாய்ச்சல்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவிடம் திமுக வேட்பாளர் வைகை சேகர் தோல்வியைத் தழுவியதையடுத்துசென்னை அறிவாலயத்தில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் தேர்தல் முறையாக நடக்கவில்லை. தேர்தல் கமிஷன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை.தேர்தல் கமிஷன் புனிதமாக இருக்க வேண்டிய இடம். ஆனால், அது ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது.
இதனால், அங்கு போட்டியிடவே வேண்டாம் என்று கூட முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால், ஜனநாயகக்கடமையை ஆற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான் போட்டியிட்டோம்.
முதலில் 16 வகையான ஆவணங்களைக் காட்டினால் வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன்அறிவித்திருந்தது. ஆனால், தேர்தல் நாளன்று திடீரென 17வது ஆவணமாக கிராம அதிகாரியின் சான்றிதழ் பெற்றுவருபவர்களும் வாக்களிக்கலாம் என கமிஷன் அறிவித்தது. இதைப் பயன்படுத்தி அதிமுகவினர் பலருக்கு கள்ளவாக்குகளைத் தயார் செய்து கொடுத்து வாக்களிக்க வைத்தனர்.
இது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்என்றார்.
வழக்கமாக புன்சிரிப்புடன் காணப்படும் கருணாநிதியின் முகத்தின் இன்று அது மிஸ்ஸிங் ! .












Click it and Unblock the Notifications