அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெ. தேர்வு
சென்னை:
அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக (முதல்வர்) ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று பிற்பகலில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இக் கூட்டம்நடந்தது. இதில் ஜெயலலிதா கலந்து கொள்வில்லை. கூட்டத்தில் ஜெயலலிதாவின் பெயரை பன்னீர்செல்வம்முன்மொழிந்தார். அங்கிருந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதாவின் பெயரை வழிமொழிந்தனர்.
இதையடுத்து ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை ஆளுநரிடம் தர முடிவுசெய்யப்பட்டது.
கூட்டததுக்குப் பின் பன்னீர்செல்வத்திடம் பேசிய நிருபர்கள் ஜெயலலிதா ஏன் கூட்டத்துக்கு வரவில்லை எனக்கேட்டனர்,
அதற்கு பன்னீர் பதிலளிக்கையில், அம்மா வர வேண்டிய அவசியமேயில்லை. ஏனென்றால் நான் தான் இன்னும்சட்டமன்றக் கட்சித் தலைவராக இருக்கிறேன் என்றார்.
ஜெயலலிதா முதல்வரானவுடன் உங்களுக்கு என்ன பதவி கிடைக்கும் எனக் கேட்டபோது, அம்மா எந்த பதவிதந்தாலும் அதை ஏற்பேன் என்றார்.
விரைவில் ஆளுநரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை சமர்பிப்பேன் என்றார்.