வேலூர் அருகே கோவில் தேர் கவிழ்ந்து அர்ச்சகர் பலி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் பிரம்மோற்சவத்தின் போது தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து கவிழ்ந்ததில்அர்ச்சகர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் நேற்று (சனிக்கிழமை) அங்குபிரம்மோற்சவம் திருவிழா நடைபெற்றது.

விழாவை காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திர சுவாமிகள் தொடங்கி வைத்தார். பிறகு கோவில் தேரோட்டம்தொடங்கியது.

ஆனால் தேரோட்டம் தொடங்கிய 5 நிமிடத்திலேயே தேரிலிருந்த ஒரு சக்கரத்தின் அச்சு முறிந்தது. இதனால் தேர்ஒரு பக்கமாக சாய்ந்தது. இதில் தேர் மேலிருந்த அர்ச்சகரான சுரேஷ் என்பவர் கீழே விழுந்து, தேர் சக்கரத்தில் சிக்கிபரிதாபமாக இறந்தார்.

மேலும் தேருக்கு முட்டுக் கொடுக்க முயன்ற 2 பேரும் ஒரு பக்தரும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+