தனித்து போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெ.
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
15வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜெயலலிதா 33,577 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில்உள்ளார்.
இந்தச் சுற்று வாக்குகள் விவரம்:
ஜெயலலிதா- அதிமுக- 64,715
வைகை சேகர்- திமுக- 31,138
ஜெயச்சந்திரன்- மதிமுக- 7,703
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- 4,450
இதன் மூலம் ஜெயலலிதா 33,577 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ்செல்வன் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது பா.ம.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தன.
இந்த முறை அதிமுக தனித்துப் போட்டியிட்டது. ஆனாலும் கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில்ஜெயலலிதா வெற்றியை எட்டிக் கொண்டிருகிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications