ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி: மீண்டும் முதல்வராகிறார்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா 41,150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அனைத்துச் சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து விட்டது.
இறுதி வாக்கு நிலவரம்:
ஜெயலலிதா- அதிமுக- 78,422
வைகை சேகர்- திமுக- 37,222
ஜெயச்சந்திரன்- மதிமுக- 8,420
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- 5,176
1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெல்வார் என அதிமுக கூறி வந்தது. ஆனால், வாக்கு வித்தியாசம்குறைந்த அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் பெற்றதைவிட ஜெயலலிதா மிக அதிக வாக்குகள்பெற்றுள்ளார். இருப்பினும் வாக்கு வித்தியாசம் 50,000 கூட இல்லாதது அவருக்கு மகிழ்ச்சியான விஷயம் அல்ல.
எதிர்க் கட்சிகள் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இந்த வாக்கு வித்தியாசத்தை மேலும்குறைத்திருக்க முடியும் என்று தான் வாக்கு நிலவரம் காட்டுகிறது.
எப்படியிருப்பினும். பல்வேறு தடைகளையும் தாண்டி மீண்டும் முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடித்துள்ளார்ர்ஜெயலலிதா.