அரியலூர் அருகே 1,000 பவுன் நகை கொள்ளை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அடகுக்கடை உரிமையாளர் வீட்டில் இருந்த 1,000 பவுன் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன.
ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் நிகார் சந்த். இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள 5 ஊர்களில் அடகுக்கடைவைத்துள்ளார். பொது மக்களிடம் வாங்கிய நகைகளை ஜெயங்கொண்டம் வீட்டில் பீரோவில் வைத்திருப்பார்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு நிகார் சந்த் தனது சொந்த ஊரான ராஜஸ்தான் சென்று விட்டார். வீட்டில்அவரது மனைவியும், 2 மகன்களும் மட்டுமே இருந்தனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 3 பேருமே வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர். வீட்டிற்கு திரும்பிவந்த போது வீட்டின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள்கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
1,000 பவுன் தங்க நகைள், 1 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.60,000 ரொக்கப்பணமும் களவு போயிருப்பதாககூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த ராஜாராம் என்பவனை போலீசார் தேடிவருகின்றனர். இவர் தலைமறைவாகிவிட்டார்.