அரியலூர் அருகே 1,000 பவுன் நகை கொள்ளை

Subscribe to Oneindia Tamil

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அடகுக்கடை உரிமையாளர் வீட்டில் இருந்த 1,000 பவுன் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன.

ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் நிகார் சந்த். இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள 5 ஊர்களில் அடகுக்கடைவைத்துள்ளார். பொது மக்களிடம் வாங்கிய நகைகளை ஜெயங்கொண்டம் வீட்டில் பீரோவில் வைத்திருப்பார்.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு நிகார் சந்த் தனது சொந்த ஊரான ராஜஸ்தான் சென்று விட்டார். வீட்டில்அவரது மனைவியும், 2 மகன்களும் மட்டுமே இருந்தனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 3 பேருமே வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர். வீட்டிற்கு திரும்பிவந்த போது வீட்டின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள்கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

1,000 பவுன் தங்க நகைள், 1 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.60,000 ரொக்கப்பணமும் களவு போயிருப்பதாககூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த ராஜாராம் என்பவனை போலீசார் தேடிவருகின்றனர். இவர் தலைமறைவாகிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+