பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று காலை தொடங்கியது.
லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்உரையாற்றினார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. அதில் 5 எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். படையினரின் சரியான பதிலடித் தாக்குதலால் தீவிரவாதிகளும்கொல்லப்பட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் நடக்க இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து இன்று நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியதையடுத்து மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.டெல்லி முழுவதுமே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications