நக்கீரன் நிருபர் மனைவியிடம் போலீசார் முறைகேடு
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீசார் அவரது மனைவி மற்றும் வீட்டுப்பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து சிவசுப்பிரமணியத்தின் மனைவி கதறி அழுதவாறு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த சனிக்கிழமை காலை என் கணவரை கைவிலங்கு போட்டு அழைத்துக் கொண்டு வந்த போலீசார் வாரண்ட்எதுவும் இல்லாமல் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டனர். நான் வாரண்ட் எங்கே என்று கேட்டதற்கு,என்னை வீட்டில் இருந்து வெளியே தூக்கி வீசினர்.
என்னை என் கணவரிடம் கூட பேச அனுதிக்கவில்லை. மிக அடாவடித்தனமாக நடந்து கொண்டனர். வீட்டில்இருந்த பொருள்களை எல்லாம் தூக்கி எறிந்து அடாவடித்தனம் செய்தனர். பெண்களை மிகக் கேவலமாகநடத்தினர். இந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அகில இந்திய மனித உரிமை கமிஷனிடம்புகார் கூறுவேன் என்றார் ஜெயந்தி.
கடந்த சனிக்கிழமை போலீசார் சிவசுப்ரமணியத்தை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, செய்தி அறிந்துஅங்கு வந்த பொதுமக்கள் மற்றும் நிருபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர்.
சிவசுப்ரமணியத்தைப் பார்த்தவுடன் ஜெயந்தியும் மகன் நக்கீரனும் கதறி அழுதுள்ளனர். தன்னிடம் தாவி வந்தமகன் நக்கீரனைத் தூக்கக் கூட சிவசுப்ரமணியத்தைப் போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஜெயந்தி, சிவசுப்ரமணியத்தின் தாய், சகோதரி ஆகியோரை பெண் போலீசார் உடைகளை உருவியும் சோதனைநடத்தியுள்ளனர்.
மேலும் பெண்களை ஒருமையிலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர்.
காலை 8.15க்கு வந்த போலீசார் காலை 11.10 வரை வீட்டில் சோதனை என்ற பெயரில் அத்துமீறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications