வீடு வீடாக பணம் கொடுத்து பெற்ற வெற்றி இது: வைகோ கருத்து
கோயம்புத்தூர்:
ஆண்டிப்பட்டியில் ஜனநாயகத்தின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் ஜனநாயகத்தின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன். இருப்பினும் பணபலம், அதிகாரதுஷ்பிரயோகத்தை உபயோகித்ததை நிதர்சனமாக காண முடிந்தது.
அரசியல் வரலாற்றிலேயே இது வரை இல்லத அளவிற்கு அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி அதிமுகவெற்றி பெற்றுள்ளது. வீடு வீடாக சென்ற பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
இந்த வெற்றி வேதனையானது. தமிழகத்துக்கு நல்லதல்ல.
பணம் பலம் மிக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் நாங்கள் போட்டியிட்டோம். கடந்த தேர்தலை விடநாங்கள் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறோம். இதற்கு காரணம் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்டவர் சாதாரணமானவர்.
தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் இதே நிலை நீடிக்கும் என்று கூற முடியாது. எனெனில்மின் கட்டண உயர்வு, நிதி நிலை அறிக்கை ஆகிய அம்சங்கள் மக்களின் சிந்தனையை மாற்றும் என்று வைகோகூறினார்.












Click it and Unblock the Notifications