ரயில் கட்டணம் உயர்வு: சென்னை-திருவனந்தபுரம் இடையே அதிவேக ரயில் அறிமுகம்
டெல்லி:
இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் இரண்டாம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புக்கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய அதிவேக ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2002-2003ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார்இதனை தாக்கல் செய்தார். இதன் முக்கிய அம்சங்கள்:
எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாவது வகுப்புக் கட்டணம் தூரத்துக்கு தகுந்தவாறு 6 முதல் 14 சதவீதம்உயர்த்தப்படுகிறது. குறைந்தபட்ச இரண்டாவது வகுப்பு ரயில் கட்டணம் ரூ. 15ல் இருந்து 16 ஆக உயர்த்தப்படும்.இதன்மூலம் ரயில்வேக்கு ரூ. 910 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்குவரும்.
ஜன சதாப்தி எனப்படும் அதிக வசதியான இரண்டாவது வகுப்பு இருக்கைகள் கொண்ட 16 அதிவேக ரயில்கள்அறிமுகப்படுத்தப்படும். இதில் ஒரு ரயில் சென்னை-விஜயவாடா இடையே குண்டூர் வழியாக இயக்கப்படும்.
25 கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 7 பாசஞ்சர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்படும். எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருரயில்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நாகர்கோயில் வழியாகபுதிய ரயில் விடப்படும். கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு வாரந்திர ரயில் விடப்படும்.
படுக்கை வசதி கொண்ட ரயில்களில் கட்டணம் உயரும். தூரத்துக்கு தகுந்தவாறு ரூ. 155ல் இருந்து ரூ. 160 ஆகஉயர்த்தப்படும். ஏ.சி. சேர் கார்களில் கட்டணம் ரூ. 300ல் இருந்து ரூ. 350 ஆக உயர்த்தப்படும். ஏ.சி பெட்டிகளில்கட்டணம் ரூ. 1,440ல் இருந்து ரூ. 1,400 ஆக குறைக்கப்படும்.
ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் ரயில்வே துறையின் சார்பிலேயே பாட்டில்கள், பாக்கெட்களில் குடிநீர்விற்கப்படும். இதன் பெயர் ரயில் நீர்.
இது இந்தியன் ரயில்வேயின் 150வது ஆண்டு. இந்த ஆண்டு பயணிகள் குறைதீர்ப்பு ஆண்டாக கடைபிடிக்கப்படும்.
முன்பதிவு செய்யப்படாத (அன்-ரிசர்வ்ட்) டிக்கெட்டுகளைக் கூட எந்த ஸ்டேசனிலும் வாங்கிக் கொள்ளும்வகையில் வசதி கொண்டு வரப்படும். எந்த ரயிலுக்கும் எந்த ஸ்டேசனிலும் இனி டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.
இந்திய ரயில்களில் தினந்தோறும் 13 மில்லியன் மக்கள் பயணம் செய்கின்றனர். இதில் 12 மில்லியன் மக்கள்அன்-ரிசர்வ்ட் பயணிகள்.
ரயில்வேக்கான இந்த ஆண்டின் திட்ட ஒதுக்கீடு ரூ. 12,330 கோடிகள்.
ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும்.
சிமெண்ட், பெட்ரோலியப் பொருள்கள், உப்பு, பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள்கள், பயறுகள், யூரியா,உரம், வைக்கோல் ஆகியவற்றுக்கு சரக்குக் கட்டணம் குறைக்கப்படும்.
நிலக்கரி, இரும்பு தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செலப்படும் இரும்புத் தாது ஆகியவற்றின் சரக்குக் கட்டணம்சிறிது உயர்த்தப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ. 45 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.
100 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்கும் அனைத்து ரயில் நிலையங்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு ஆன்-லைன்ரிசர்வேசன் முறை கொண்டு வரப்படும். இதன் மூலம் கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும்கம்ப்யூட்டர் ரிசர்வேசன் வந்துவிடும்.
நாடு முழுவதும் 16 ரயில்களின் சேவை அதிகரிக்கப்படும். மேலும் 14 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்பட்டு அருகாமைஊர்கள்வரை அவை இயக்கப்படும்.
மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications