மதுரையில் உயர் நீதிமன்ற கிளையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை:
மதுரையில் உயர் நீதிமன்ற பெஞ்ச் அமைப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையில் உயர் நீதிமன்ற பெஞ்ச் அமைப்பதை எதிர்த்து வக்கீல்கள் ஸ்ரீதர்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றம் சார்ட்டர்டு நீதிமன்றம் என்பதால், அதன் கிளையைவேறு எங்கும் அமைக்க முடியாது. மாநில சீரமைப்புச் சட்டம் 51வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் வராது.அதனால் அதன் பெஞ்ச் வேறு எங்கும் அமைக்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.
இம்மனுவை நீதிபதி சதாசிவம் விசாரித்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்த சதாசிவம் பிறப்பித்த உத்தரவில்கூறியுள்ளதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் பல்வேறு உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும் பார்க்கும் போது, எந்த அடிப்படையில்உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் பெஞ்ச்சுகளை வேறு இடத்தில் துவங்க முடியும்.
தென் மாவட்ட மக்களின் வசதிகளையும் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளையும் கருத்தில் கொண்டுதான்மதுரையில் பெஞ்ச் அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான அடிப்படை ஆதாரங்கள் கூட இந்த மனுக்களில் இல்லை. அதனால் இந்த மனுக்களைத்தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி சதாசிவம் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
மேலும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை மனுதாரர்கள் வீணடித்துள்ளதற்கும் நீதிபதி சதாசிவம் கடும்கண்டனத்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications