தேர்தல் முறைகேடுகள்: ஆளுநரிடம் கிருஷ்ணசாமி புகார்
சென்னை:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் ராம் மோகன் ராவைசந்தித்து ஆண்டிப்பட்டி தேர்தல் முறைகேடுகள் குறித்துப் புகார் தெரிவித்தார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஒரு வேட்பாளராகப் போட்டியிட்ட கிருஷ்ணசாமி ஆளுநர் மாளிகைக்குச் சென்று,புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
பின்னர், ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலின்போது பல்வேறு முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் நடந்ததாகராவிடம் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார்.
அவர் கொடுத்த மனுவில், கீரிப்பட்டி உள்ளிட்ட சில ஊராட்சிப் பகுதிகளில் ஜாதி துவேஷம் காரணமாக தேர்தல்நடத்தாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மதுரை அருகே உள்ள கீரிப்பட்டி உள்ளிட்ட பல தலித் மக்கள் வாழும் கிராமங்களில் கடந்த ஆண்டுஅக்டோபரிலேயே நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications