லாரி மீது குமரி எக்ஸ்பிரஸ் மோதல்: லாரி டிரைவர் பலி
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள ரயில்வே கிராஸிங்கில் இன்று (புதன்கிழமை) காலை ஒரு லாரி மீது கன்னியாகுமரிஎக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நாக்பூரில் இருந்து ஆரஞ்சு பழங்களை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று விழுப்புரம் அருகே உள்ளமயிலம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயில்வே கிராஸிங்கில் கேட் மூடப்பட்டிருந்தது. அது தெரியாமல் வேகமாக வந்த அந்த லாரி ரயில்வேகேட்டை இடித்துக் கொண்டு தண்டவாளத்தில் சென்று நின்றுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்அந்த லாரி மீது பலமாக மோதியது. இதனால் சில கி.மீ. தூரத்துக்கு லாரியை அந்த ரயில் இழுத்துச் சென்றது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். லாரி கிளீனர் பலத்தகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லாரியை அப்புறப்படுத்த தாமதமானதால் அந்த பகுதி நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. அதேபோல் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரிஎக்ஸ்பிரஸ் உட்பட 4 ரயில்கள் சென்னைக்குத் தாமதமாகச் சென்றன.












Click it and Unblock the Notifications