For Quick Alerts
For Daily Alerts
Just In
முதுமலை காட்டில் தீ: 2 பேர் கைது
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப் பகுதியில் தீ வைத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதுமலை வனப் பகுதியில் சமீபத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ வெகு வேகமாகப் பரவி வருகிறது. இதனால் யானை,புலி, மான் உள்பட பல விலங்குகள் காட்டுக்குள்ளிருந்து வெளியேறி கிராமப் பகுதிகளில் புகுந்துள்ளன. தீயைஅணைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே காட்டுக்குள் தீ வைத்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரியா சாஹு முதுமலைக் காட்டுக்கு வந்து தீயைஅணைக்கும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.
காட்டுத் தீ காரணமாக தேக்கு மரங்களுக்கோ வன விலங்குகளுக்கோ எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றுமுதுமலை வன விலங்குகள் சரணாலய காப்பாளர் அசோக் குப்புரெட்டி கூறினார்.
Comments
Story first published: Wednesday, February 27, 2002, 5:30 [IST]