நக்கீரன் நிருபர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு
சேலம்:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தின் மனைவி, தந்தை, சகோதரி மற்றும் தினமலர், தினகரன் ஆகியபத்திரிக்கைகளின் நிருபர்கள் மீதும் சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வீரப்பன் விவகாரம் தொடர்பாக சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆத்தூரில் உள்ள அவரதுவீட்டில் ஈரோடு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது சிவசுப்ரமணியம் உடன் இருந்தார். அந்த சமயத்தில் தன்னிடம் பெண் போலீஸார் முறைகேடாக நடந்துகொண்டதாக சிவசுப்ரமணியத்தின் மனைவி ஜெயந்தி போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் போலீஸ் சோதனையின்போது பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியும், பல்வேறு பிரிவுகளின்கீழும் சிவசுப்ரமணியத்தின் மனைவி ஜெயந்தி, தந்தை பெரியசாமி, சகோதரி மலர்க்கொடி ஆகியோர் மீது ஈரோடுபோலீஸார் புகார் கொடுத்ததால், ஆத்தூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, ஆத்தூர் தினமலர் மற்றும் தினகரன் பத்திரிக்கை நிருபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதேபோல, சென்னையைச் சேர்ந்த பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications