தம்பிதுரைக்கு சபாநாயகர் வாய்ப்பு?
சென்னை:
ஜெயலலிதா தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தம்பித்துரை அமைச்சராக இடம் பெற மாட்டார்என்றும் அவரை சபாநாயகராக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் 2-ம் தேதி புதிய தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கவுள்ளார். புதிய அமைச்சர்களின் பட்டியலைஅவர் தயார் செய்து விட்டதாகவும், இன்று (புதன்கிழமை) அந்தப் பட்டியலை ஜெயலலிதா, ஆளுநரிடம்வழங்குவார் என்றும் தெரிகிறது.
புதிய அமைச்சரவையில் 20 பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. சிக்கனம் மற்றும் ராசி எண்அடிப்படையில் இந்த அமைச்சர்கள் குறைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதிய அமைச்சரவையில் யார் இடம் பெறுவார்கள், யார் வெளியேறுவார்கள் என்ற யூகங்கள்தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. இதனால் தற்போதைய பல அமைச்சர்களின் வயிறுகள் கலங்கிக்கொண்டிருக்கின்றன.
சமீபத்திய தகவலின்படி, தம்பித்துரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதற்குப்பதில் காளிமுத்துவை அமைச்சராக்கி விட்டு, அந்தப் பொறுப்பில் தம்பித்துரை அமர வைக்கப்படுவார் என்றுஅதிமுகவினர் கூறுகின்றனர்.
தம்பித்துரை மீது பல்வேறு புகார்களை கட்சிக்காரர்களே சுமத்தியிருப்பதால் ஜெயலலிதா இந்த அதிரடி முடிவைஎடுக்கவுள்ளார் என்றும் இதற்குக் காரணம் கூறப்படுகிறது.
எப்படி இருப்பினும், ஜெயலலிதா பட்டியலை வெளியிடும் வரை அமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு விடையேகிடைக்காது.